Friday, May 18, 2012

கடற்கரையை நம்பி வாழும் பறவையினங்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டது: ஆய்வு அறிக்கை தகவல்

தரையில் இனப்பெருக்கம் செய்து, கடலுக்குச் சென்று உணவுதேடும் ஆல்பட்ரோஸ் குடும்பத்தைச் சேர்ந்த பறவையினங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட கடல்சார் பறவைகள் பற்றி ஆய்வு நடத்தும் பேராசிரியர் ஜோன் க்ரொக்ஷால் கூறியதாவது:- அல்பாட்ரோஸ் குடும்பத்தைச் சேர்ந்த 22 பறவையினங்களில் 17 இனங்கள் அழிந்துவிடும் நிலையில் உள்ளது. வர்த்தக ரீதியான நவீன மீன்பிடி முறைகளாலும், பெருச்சாளிகள், காட்டுப் பூனைகள் போன்ற உயிரினங்களால் இப்பறவைகளின் இனப்பெருக்கத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளுமே இந்த அழிவுக்கு காரணம் . கடல் மற்றும் கடல்சார்ந்த பகுதிகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்யவும், அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளை எச்சரிப்பதற்கும் இந்த கடல்சார் பறவைகள் மிகவும் அவசியமானவை. இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

Invited comments from all visitors