Friday, May 18, 2012

வீனஸ் கிரகத்தில் உயிரினங்கள்: ரஷ்ய விஞ்ஞானி கருத்து

மாஸ்-
சூரிய குடும்பத்தில் பூமியை ஒத்த மற்றொரு கிரகம் வீனஸ் என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் வெள்ளி ஆகும். இதன் விட்டம் 7,521 மைல்கள். பூமியின் விட்டமோ 7,926 மைல்கள் ஆகும். எனினும் இதன் மேற்பரப்பில் 97 சதவீதம் கார்பன்&டை&ஆக்சைடு வாயுவே நிரம்பியுள்ளது. சூரியனிலிருந்து 67.2 மில்லியன் மைல்கள் தொலைவில் அமைந்துள்ள இதன் வெப்பநிலை 480 டிகிரி செல்சியஸ் ஆகும். இத்தகைய தன்மை வாய்ந்த இந்த கிரகத்தில் உயிரினங்களின் வாழ்வு குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 1982ம் ஆண்டு அனுப்பப்பட் வீனஸ்&13 எடுத்த புகைப்படங்களை ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் லியோனிட் சான்பாமலிட்டி என்பவர் மறு ஆய்வு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் தேள் ஒன்றின் உடலமைப்பை கொண்ட உருவமும், தட்டு ஒன்றும் நகர்வது போன்ற காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருப்பது ஆராய்ச்சியாளர்களிடையே தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் கண்டங்கள் அனைத்து இணைந்து புதிய அமேசியா கண்டம் உருவாகும் விஞ்ஞானிகள் தகவல்

உலகில் உள்ள கண்டங்கள் அனைத்து இணைந்து அமேசியா என்ற புதிய பெரிய கண்டம் உருவாகும் என புவி யியல் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவின் யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியல் நிபுணர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில் அமெரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களின் வடக்கு அப்குதி நீர் மற்றும் காற்றுப்போக்கி னால் இணையும். இதனுடன், ஆர்டிக் கடலும், கரீபியன் கடலும் ஒன்றாக சேரும். இதன் மூலம் மிகப்பெரிய புதிய கண்டம் உருவாகும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பூமியின் அடியில் உள்ள பிளேட்டுகள் தற்போது நகர்ந்த வண்ணம் உள்ளன. இதனால் ஆசியா மற்றும் ஐரோப்பிய கண்டங்களின் வடக்கு முனை பூமி பிளேட்டு கள் ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்கும் அபாயம் உள் ளன. அதுபோன்ற மாற்றங்களி னால் ஆஸ்திரேலியா கண்டம் இந்தியாவுடன் இணைய லாம். என தெரியவந்துள்ளதாக தகவல் வெளியிட்டு உள்ளார்.

கடற்கரையை நம்பி வாழும் பறவையினங்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டது: ஆய்வு அறிக்கை தகவல்

தரையில் இனப்பெருக்கம் செய்து, கடலுக்குச் சென்று உணவுதேடும் ஆல்பட்ரோஸ் குடும்பத்தைச் சேர்ந்த பறவையினங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட கடல்சார் பறவைகள் பற்றி ஆய்வு நடத்தும் பேராசிரியர் ஜோன் க்ரொக்ஷால் கூறியதாவது:- அல்பாட்ரோஸ் குடும்பத்தைச் சேர்ந்த 22 பறவையினங்களில் 17 இனங்கள் அழிந்துவிடும் நிலையில் உள்ளது. வர்த்தக ரீதியான நவீன மீன்பிடி முறைகளாலும், பெருச்சாளிகள், காட்டுப் பூனைகள் போன்ற உயிரினங்களால் இப்பறவைகளின் இனப்பெருக்கத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளுமே இந்த அழிவுக்கு காரணம் . கடல் மற்றும் கடல்சார்ந்த பகுதிகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்யவும், அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளை எச்சரிப்பதற்கும் இந்த கடல்சார் பறவைகள் மிகவும் அவசியமானவை. இவ்வாறு அவர் கூறினார்